இந்தியா

14 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: ராஜ் தாக்கரேவுக்கு எதிராக பிடியாணை

PTI

சாங்லி: மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்ட நீதிமன்றம், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு எதிராக பிணையில் விடுதலையாக முடியாத பிடியாணையை பிறப்பித்துள்ளது.

2008ஆம் ஆண்டு அவதூறாக பேசிய வழக்கில், ராஜ் தாக்கரே மீது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 109 மற்றும் 117-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் கீழ், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின் பிடியாணை பிறப்பித்திருக்கும் நீதிமன்றம், ஜூன் 8ஆம் தேதிக்குள் ராஜ் தாக்கரே உள்ளிட்டோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றும் விவகாரத்தில் ராஜ் தாக்கரே மகாராஷ்டிர அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை தூசுதட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT