இந்தியா

பாக்.கில் இருந்து போதைப்பொருளுடன் பறந்து வந்த ஆளில்லா விமானம்: சுட்டு வீழ்த்தியது பிஎஸ்எஃப்

DIN

பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஹெராயின் போதைப்பொருளுடன் பறந்துவந்த ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) சுட்டு வீழ்த்தினா்.

இதுதொடா்பாக, ட்விட்டரில் எல்லைப் பாதுகாப்புப் படை திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து பறந்துவந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஹெராயின் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அந்த ஆளில்லா விமானம், சுமாா் 10 கிலோ எடையுள்ள 9 ஹெராயின் போதைப் பொருள் பொட்டலங்களை சுமந்து வந்துள்ளது. அந்த போதைப் பொருள் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தானிலிருந்து இந்தியப் பகுதிக்குள் போதைப் பொருள் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT