முகப்பு
இந்தியா

மயக்க மருந்து செலுத்தி வெட்டி எடுக்கப்படும் காண்டாமிருகத்தின் கொம்புகள்!

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் கொம்புகள் வேட்டைக் காரர்களால் மயக்க மருந்து செலுத்தி வெட்டி எடுக்கப்படுவது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

Updated On : 13 மே 2022, 9:05 pm IST
rhino
பகிர்:

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் கொம்புகள் வேட்டைக் காரர்களால் மயக்க மருந்து செலுத்தி வெட்டி எடுக்கப்படுவது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

அஸ்ஸாமின் ஒராங் தேசிய பூங்காவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் கொம்பு வேட்டைக்கார்களால் மயக்க மருந்து செலுத்தி வெட்டி எடுக்கப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மே 9 ஆம் தேதி ஒராங் தேசிய பூங்காவில் முவமாரி பகுதியில் காண்டாமிருகம் ஒன்று கொம்பு இல்லாமல் இருந்ததை பூங்காவில் உள்ள அதிகாரிகள் கவனித்துள்ளனர். இதனையடுத்து, வனத்துறை மருத்துவர்கள் பூங்காவிற்கு வந்து காண்டாமிருகத்தினை பரிசோதித்தனர். காண்டாமிருகத்தினை பரிசோதித்த வனத்துறை மருத்துவர் மற்றும் அந்த பூங்காவின் தலைமைக் காவலர் இருவரும் வேட்டைக் காரர்கள் துப்பாக்கியின் மூலம் மயக்க மருந்து செலுத்தி கொம்பினை வெட்டி எடுத்திருக்கலாம் என சந்தேகித்தனர். ஆனால், குண்டு பாய்ந்ததற்கான எந்த ஒரு அடையாளமும் அந்த காண்டாமிருகத்தின் மீது தென்படவில்லை. முதலில் இதனை வனவிலங்குகளுக்குள் ஏற்பட்ட சண்டையினால் ஏற்பட்டிருக்கலாம் என நினைத்த வனத்துறை மருத்துவர் பின்னர் கொம்பு வெட்டி அகற்றப்பட்டிருப்பதை உறுதி செய்தார்.

வனத்துறை மருத்துவரின் சிகிச்சைக்கு பின்னர் காண்டாமிருகத்தின் உடல்நிலை சீராக உள்ளது. ஆனால், இது போன்ற சம்பவங்கள் வனத்துறையினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. அதே போல இந்த வேட்டையில் கால்நடை மருத்துவம் படித்தவர்கள் சம்பந்தபட்டிருக்கலாம் என்றும் வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். மயக்க மருந்து சதாரண நபர்களுக்கு கிடைப்பது கடினம். அப்படி கிடைத்தாலும் அதனை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பது குறித்து சாதாரண மனிதர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments