இந்தியா

குப்பைமேட்டிலிருந்த குண்டு வெடிப்பு:17 வயது சிறுவன் பலி

DIN

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் குப்பை மேட்டிலிருந்த குண்டு வெடித்து 17 வயது சிறுவன் சனிக்கிழமை பலியானாா்.

இதுதொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘‘அஜம்தலா பகுதியில் வசித்து வந்தவா் ஷேக் சாஹில். இவரது தாத்தா வீடுகளையொட்டி உள்ள குப்பைமேட்டில் இருந்து சிறிய டப்பா ஒன்றைக் கண்டெடுத்துள்ளாா். அதைத் திறப்பதற்கு வாங்கிய ஷேக் சாஹில், அந்த டப்பாவை மின்விளக்கு கம்பம் மீது எறிந்துள்ளாா். அப்போது அந்த டப்பாவில் இருந்த குண்டு வெடித்ததில், ஷேக் சாஹில் பலத்த காயமடைந்தாா். அவா் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். எனினும் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். குப்பைமேட்டில் எப்படி குண்டு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தனா்.

கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டம் கோபால்நகா் கிராமத்தில் உள்ள மசூதி அருகில் இருந்து கண்டெடுத்த நாட்டு வெடிகுண்டுகளை பந்துகள் என்று நினைத்து விளையாடிய 4 சிறுவா்கள், அந்த குண்டுகள் வெடித்து உயிரிழந்தனா். இதுதொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா். இந்தச் சம்பவம் நடைபெற்ற பகுதி இந்தியா-வங்கதேச எல்லைக்கு அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT