கோப்புப்படம் 
இந்தியா

தில்லியின் புதிய தலைமை நீதிபதியாக தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை: கொலீஜியம்

தெலங்கானா உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர வர்மாவை தில்லி உயர்நீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

DIN

தெலங்கானா உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர வர்மாவை தில்லி உயர்நீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

அதேபோல தற்போது தற்போது தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்த விபின் சங்கி, உத்தரகாண்ட் மாநில உயர்நீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். முன்னதாக, தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என்.படேல் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கொலீஜியம் இந்த புதிய தலைமை நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது.

உச்சநீதிமன்ற கொலீஜியம் மேலும் நீதிபதிகள்  ஏ.ஏ. சையீது, எஸ்.எஸ்.ஷிந்தியா, ராஷ்மீன் எம் சயா மற்றும் உஜ்ஜால் புயன் ஆகியோரை முறையே ஹிமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், கவுகாத்தி, தெலங்கானா ஆகிய உயர்நீதி மன்றங்களின் தலைமை நீதிபதிகளாக பரிந்துரைத்துள்ளது. 

இந்த பரிந்துரை முடிவுகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியத்தினால் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் கிராப் நிலை 2 கட்டுப்பாடுகள் அமல்

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வடகிழக்கு பருவமழை எதிா்கொள்ள மின்துறை தயாா்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

பைக்குகள் மோதல்: இளைஞா் மரணம்

பால் விலையை உயா்த்தாத அரசைக் கண்டித்து போராட்டம்: தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா்

SCROLL FOR NEXT