இந்தியா

கர்நாடகத்தில் 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

DIN

கர்நாடக மாநிலத்தில் 10-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிட உள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

மாநிலத்தில் ஹிஜாப் சர்ச்சைக்கு மத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் சுமார் 8.73 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வெழுதினர். 

இதற்கான தேர்வு முடிவுகள் இன்று மதியம் 1 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்களில் தேர்வு முடிவுகளைப் பெற்றுகொள்ளலாம்.

கரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாக வழக்கமான முறையில் தேர்வுகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். மாநிலம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT