இந்தியா

நேபாளத்தில் பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்

DIN

நேபாளத்தில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக பாரிசை தளமாகக் கொண்ட விலங்குகள் ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பு தெரிவித்துள்ளது. 

நேபாளத்தின் தலைநகரில் 6 நகராட்சிகளில் இதுவரை 932 பன்றிகள் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக காத்மாண்டு போஸ்ட் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. 

நேபாளத்தில் வியாழன் மாலை நிலவரப்படி பன்றிக் காய்ச்சல் பாதிப்பு 1,426 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நோய் ஆசியா, கரீபியன், ஐரோப்பா மற்றும் பசிபிக் முழுவதும் பல நாடுகளில் பரவியுள்ளது. இது வீட்டு மற்றும் காட்டுப் பன்றிகளைப் பாதிக்கிறது.

உலகளவில், 2005 முதல் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மொத்தம் 73 நாடுகளில் பதிவாகியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT