இந்தியா

தில்லியில் விளையாட்டுத் திடல்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்: அரவிந்த் கேஜரிவால்

DIN

புது தில்லி: தில்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து விளையாட்டுத் திடல்களும் இரவு 10 மணி வரை விளையாட்டு வீரர்களுக்காக திறந்திருக்கும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் திடல்கள் மாலை 6 மணிக்கு மூடப்படுவதால் விளையாட்டு வீரர்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். எனவே தில்லி அரசின் கட்டிப்பாட்டில் உள்ள அனைத்து விளையாட்டுத் திடல்களும் இரவு 10 மணி வரை விளையாட்டு வீரர்களுக்காக திறந்திருக்கும் என்று அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்களிடம்  தெரிவித்துள்ளார்.

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சுட்டுரையில் கூறியதாவது, "நள்ளிரவு வரை விளையாட விரும்பும் விளையாட்டு வீரர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சில விளையாட்டுத் திடல்கள் முன்கூட்டியே மூடப்படுவதாக செய்திகள் எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளன. எனவே தில்லி அரசின் அனைத்து விளையாட்டுத் திடல்களையும் இரவு 10 வரை திறந்திருக்க முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்".

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT