அருணாசலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆகப் பதிவு
அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் வியாழக்கிழமை பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் வியாழக்கிழமை பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
இன்று பிற்பகலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) படி, தவாங்கிலிருந்து 506 கிமீ வடக்கே 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் அட்சரேகை 32.13 மற்றும் தீர்க்கரேகை 91.62 ஆக இருந்தது.