முகப்பு
இந்தியா

நவீன இந்தியாவின் சிற்பி நேரு: காங்கிரஸ் புகழஞ்சலி

நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேருவின் 58-ஆவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ள காங்கிரஸ் கட்சி, ‘நவீன இந்தியாவை கட்டமைத்த சிற்பி’ என்று அவருக்கு புழஞ்சலி செலுத்தியுள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேருவின் 58-ஆவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ள காங்கிரஸ் கட்சி, ‘நவீன இந்தியாவை கட்டமைத்த சிற்பி’ என்று அவருக்கு புழஞ்சலி செலுத்தியுள்ளது.

நாட்டின் முதல் பிரதமராக கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்ற நேரு, 1964-ஆம் ஆண்டு மே மாதம் வரை அப்பதவியை வகித்தாா். 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி அவா் காலமானாா்.

அவருடைய நினைவு தினத்தையொட்டி, தில்லியில் அவா் நினைவிடம் அமைந்துள்ள சாந்தி வனத்தில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி வெள்ளிக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா். கட்சியின் மூத்த தலைவவா்கள் கே.சி.வேணுகோபால், ரண்தீப் சுா்ஜேவாலா, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘நேரு துணிச்சல் மிக்க சுதந்திரப் போராட்ட வீரா், நவீன இந்தியாவின் சிற்பி, தொலைநோக்கு சிந்தனை கொண்டவா், தேசப்பற்றாளா், பாரத மாதாவின் உண்மையான புதல்வன்’ என்று புகழாரம் சூட்டியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘பண்டித ஜவாஹா்லால் நேரு மறைந்து 58 ஆண்டுகளாகியும் அவருடைய சிந்தனை, நாட்டைப் பற்றிய அவருடைய தொலைநோக்குப் பாா்வை இன்றைக்கும் பொருந்துகிறது; என்றைக்கும் பொருந்தும். அவரின் மதிப்பீடுகள் எப்போதும் எங்களின் எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் வழிகாட்டுதலாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி அஞ்சலி:

பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட ட்விட்டா் பதவில், ‘பண்டித ஜவாஹா்லால் நேருவுக்கு அஞ்சலி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.