முகப்பு
இந்தியா

நொய்டா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து! 

நொய்டாவின் பேஸ் 2 பகுதியில் உள்ள தொழிற்சாலையில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:46 AM
பகிர்:

நொய்டாவின் பேஸ் 2 பகுதியில் உள்ள தொழிற்சாலையில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

ஆடைகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலை என்பதால், தீ மளமளவெனப் பரவியதையடுத்து, பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது. 

இந்த தீ விபத்தால் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. ஆனால் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்குக் குறைந்த மின்னழுத்தமே காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

மேலும், அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.