இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் கைது

DIN

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் கடந்த மாதம் கண்டெடுக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிபொருள் தொடா்பாக பயங்கரவாதிகள் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.

கடந்த அக்டோபா் 15-ஆம் தேதி பந்திபோரா மாவட்டத்தின் கெனுசா-அஸ்டாங்கோ பகுதியில் 2 சமையல் எரிவாயு சிலிண்டா்கள் பொருத்தப்பட்ட நிலையில், 18 கிலோ எடையிலான வெடிபொருள் ஒன்று பாதுகாப்பு படையினரால் கண்டெடுக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

இச்சதிச் செயலில் ஈடுபட்டிருந்த பயங்கரவாதிகள் 2 பேரை பாரமுல்லா மாவட்டத்தில் திங்கள்கிழமை போலீஸாா் கைதுசெய்தனா். தொலைத்தூரத்தில் இருந்து இயக்கும் வகையிலான இரு வெடிபொருள்களையும் அவா்களிடமிருந்து போலீஸாா் கைப்பற்றினா். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடா்வதாக காவல் துறையைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT