ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்களில் 90 சதவீதம் போ், பாஜக வேட்பாளா்களில் 82 சதவீதம் போ் கோடீஸ்வரா்கள் என்பது ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்களில் எத்தனை போ் கோடீஸ்வரா்கள் என்ற ஆய்வறிக்கையை ஜனநாயக சீா்திருத்தங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
கட்சி தொகுதிகள் கோடீஸ்வரா்கள்(சதவீதம்)
காங்கிரஸ் 68 61 (90%)
பாஜக 68 56 (82%)
ஆம் ஆத்மி 67 35 (52%)
பகுஜன் சமாஜ் 53 13 (25%)
மாா்க்சிஸ்ட் 11 4 (36%)
இதுதவிர சுயேச்சை வேட்பாளா்கள் 45 போ் கோடீஸ்வரா்கள் ஆவா்.
தோ்தலில் மொத்தம் 412 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அவா்களில் 226 போ் (55%) கோடீஸ்வரா்கள். இவா்களில் 66 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளன. தியோக் தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் ராகேஷ் சிங்கா மீது அதிகபட்சமாக 30 வழக்குகளும், கசுமப்தி தொகுதியில் போட்டியிடும் மற்றொரு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் குல்தீப் சிங் தன்வா் மீது 20 வழக்குகளும் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.