இந்தியா

காசி-தமிழ் சங்கமம் விழாவை வியந்து மகிழ்கிறேன்: இளையராஜா!

காசி-தமிழ் சங்கமம் விழாவை காசியில் நடத்த பிரதமர் மோடி எண்ணியதை நினைத்து வியந்து மகிழ்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். 

DIN

காசி-தமிழ் சங்கமம் விழாவை காசியில் நடத்த பிரதமர் மோடி எண்ணியதை நினைத்து வியந்து மகிழ்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். 

வாராணசியில் நடைபெறும் காசி-தமிழ் சங்கமம் விழாவைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்றுள்ளார். 

இந்த விழாவைக் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா கூறுகையில், 

வாராணசியில் தமிழ் சங்கமம் விழாவை எண்ணி வியந்து மகிழ்கிறேன்.

காசியில் தமிழ் சங்கம் விழாவை நடத்தும் யோசனையை செய்த பிரதமர் மோடிக்கு நன்றி. 

பெருமைமிக்க வாராணசியில் பாரதியார் 2 ஆண்டுகள்  தங்கியிருந்தார். தோஹாவளி மற்றும் திருக்குறளில் உள்ள ஒற்றுமையை அவர் மேற்கொள் காட்டினார். மேலும், முத்து சுவாமி தீட்சிதர் பற்றியும் இளையராஜா பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT