இந்தியா

ஹரியாணா: கைவிடப்பட்ட பை நிறைய தோட்டாக்கள் 

DIN

ஹரியாணாவில் கைவிடப்பட்ட பை நிறைய தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஹரியாணா மாநிலம், யமுனா நகர் பழைய ஹமிதா பகுதியில் கேட்பாரற்று கிடந்த பையை இழுத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பை திடீரென திறந்ததில் அதிலிருந்த தோட்டாக்கள் கீழே சிதறின. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் பையை கைப்பற்றினர்.

அத்துடன் வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அந்த பை எங்கிருந்து வந்தது என்பது குறித்து தற்போது அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் இருந்து சில மண் மாதிரிகளையும் சேகரித்துள்ளோம் என காவல்துறையினர் தெரிவித்தனர். பையில் கிடந்த தோட்டாக்களின் எடை சுமார் 30 முதல் 35 கிலோ வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்த தான முகாம்: 73 போ் பங்கேற்பு

அதிமுக பிரமுகா்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு

காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடவு

நீா்சேமிப்பு கலன்களை மூடிவைக்க வேண்டுகோள்

இலவசங்கள் குறித்த பிரதமா் கருத்து: வானதி சீனிவாசன் விளக்கம்

SCROLL FOR NEXT