தேஜஸ்வி யாதவ் - ஆதித்ய தாக்கரே 
இந்தியா

மோடிக்கு எதிராக.. நிதீஷ், தேஜஸ்வியுடன் கூட்டணி சேரும் சிவசேனை?

சிவசேனை கட்சித் தலைவர்களின் ஒருவரான ஆதித்ய தாக்கரே ஆகியோர் பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை சந்திக்க பாட்னாவிலுள்ள அவரின் இல்லத்திற்கு வருகைப்புரிந்தார். 

DIN

சிவசேனை கட்சித் தலைவர்களின் ஒருவரான ஆதித்ய தாக்கரே ஆகியோர் பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை சந்திக்க பாட்னாவிலுள்ள அவரின் இல்லத்திற்கு வருகைப்புரிந்தார். 

மேலும், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவையும் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, கட்சி செயலாளர் அனில் தேசாய் ஆகியோரும் உடன் இருந்தார். 

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலைக் குறிவைத்து பிரதமர் மோடிக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பிகார் முதல்வர் நிதீஷ்குமாரும் மக்களவைத் தேர்தலை இலக்காக வைத்து ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். 

அந்தவகையில் சிவசேனை கட்சியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சியின் தலைவர்களுடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சிவசேனை கட்சியின் எம்.எல்.ஏ.வாகவுள்ள ஆதித்ய தாக்கரே  ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணத்திலும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT