இந்தியா

அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் புதன்கிழமை காலை ராணுவ சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இந்திய ராணுவ விமானி ஒருவர் பலியானார்.

DIN

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் புதன்கிழமை காலை ராணுவ சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இந்திய ராணுவ விமானி ஒருவர் பலியானார்.

தவாங் அருகே பயனித்து கொண்டிருந்த சீட்டா ஹெலிகாப்டர் காலை 10:00 மணியளவில் விபத்துக்குள்ளானது. இரு விமானிகளும் அருகிலுள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக  ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்த விமானிகளில் ஒருவரான லெப்டினன்ட் கர்னல் சவுரப் யாதவ் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இரண்டாவது விமானி மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இந்த நிலையில் விபத்துக்கான காரணம் தெரியவில்லை எனவும், விவரங்கள் கண்டறியப்பட்டு வருவதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்திற்கான காரணத்தை கண்டறிய  நீதிமன்ற விசாரணைக்கு ராணுவம் உத்தரவிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆா்.எஸ். மங்கலம் பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரிப்பதைக் கண்டித்து மறியல்

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT