இந்தியா

முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது, ஆளுநருக்கே இந்த சோதனையா?

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானின் முகநூல் பக்கம் இன்று (அக்டோபர் 15) ஹேக் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானின் முகநூல் பக்கம் இன்று (அக்டோபர் 15) ஹேக் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது குறித்து ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியதாவது: இன்று (அக்டோபர் 15) காலை முதலே எனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நான் புகார் அளித்துள்ளேன். எனது முகநூல் பக்கத்தினை மீண்டும் செயலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது குறித்து புகார் அளித்து பல மணி நேரம் ஆகியும் தற்போது வரை ஆளுநரின் பக்கம் செயலுக்கு வரவில்லை. அதேபோல அவரது முகநூல் பக்கத்தை ஹேக் செய்த பின்னர் பதிவிடப்பட்ட பதிவுகள் இன்னும் நீக்கப்படாமல் உள்ளன. ஹேக் செய்யப்பட்ட பிறகு ஆளுநரின் முகநூல் பக்கத்தில் மூன்று பதிவுகள் பதிவாகியுள்ளன. கட்டுமானப் பணிகள் தொடர்பான விடியோ அரபி வார்த்தைகளுடன் இடம் பெற்றுள்ளது.

ஆளுநரின் முகநூல் பக்கம் திரும்ப செயலுக்கு வருவதற்கு இன்னும் நேரம் தேவைப்படும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரைட்ஸ் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை: உணவக உரிமையாளர் கைது

தவெக மாநாட்டில் குவிந்த 2 லட்சம் பேர்! விஜய் சொல்லைக் கேட்காத தொண்டர்கள்?

ஸ்ட்ராபெர்ரி... ராய் லட்சுமி!

“இவ்வளவு பேர் வேல வெட்டி இல்லாம…” TVK தொண்டர்கள் குறித்து Seeman

SCROLL FOR NEXT