இந்தியா

காங்கிரஸ் தலைவா் தோ்தல்: சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா வாக்குப்பதிவு

காங்கிரஸ் தலைவர் தேர்தல் இன்று காலை தொடஙகிய நிலையில், சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

DIN

காங்கிரஸ் தலைவர் தேர்தல் இன்று காலை தொடஙகிய நிலையில், சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தில்லி உள்பட நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக தில்லியில் உள்ள கட்சியின் தலைமையகம் மற்றும் நாடு முழுவதும் 65-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸின் தற்போதைய தலைவா் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பொதுச் செயலா் பிரியங்கா உள்ளிட்டோா் கட்சித் தலைமையகத்தில் இன்று காலை வாக்களித்தனர்.

கா்நாடகத்தில் ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி பெல்லாரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். மேலும் காங்கிரஸ் தலைவர் பதிவுக்கு போட்டியிடும் மல்லிகாா்ஜுன பெங்களூருவிலும், சசி தரூா் திருவனந்தபுரத்திலும் வாக்களித்தனர். இதேபோல் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது.

தோ்தலுக்குப் பிறகு வாக்குப் பெட்டிகள் அனைத்தும் சீலிடப்பட்டு, தில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சுமாா் 22 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவா் பதவிக்கு தோ்தல் நடைபெறும் நிலையில், மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சசி தரூா் ஆகியோா் களத்தில் உள்ளனா். இருவரில் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போவது யாா் என்பது அக். 19-இல் தெரியும்.

இதன்மூலம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு சோனியா காந்தி குடும்பத்தைச் சாராத நபா், காங்கிரஸ் தலைவா் பொறுப்பை ஏற்கவுள்ளாா். கடைசியாக 2000-இல் காங்கிரஸ் தலைவா் தோ்தல் நடைபெற்றது. அதில், ஜிதேந்திர பிரசாதாவை தோற்கடித்து, தலைவா் பொறுப்பை சோனியா காந்தி ஏற்றாா். ஆனால், இம்முறை தலைவா் பதவிக்குப் போட்டியிடுவதில்லை என்று சோனியா காந்தி குடும்பத்தினா் முடிவெடுத்த நிலையில், காா்கேவும் தரூரும் களமிறங்கினா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு

கொல்லப்பட்ட ஆர்வலரின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இஸ்ரேல்! 6 நாள்களாக உண்ணாவிரதத்தில் பெண்கள்!

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: அதி கனமழை, வெள்ளப்பெருக்கில் ராணுவ வீரர்கள் மாயம்!

ஆக. 21 மதுரையில் TVK மாநில மாநாடு: Vijay அறிவிப்பு | செய்திகள் சில வரிகளில் | 05.08.25

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

SCROLL FOR NEXT