இந்தியா

உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்து: பலி 7 ஆக உயர்வு! 3 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்...

DIN

உத்தரகண்ட் கேதார்நாத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 

உத்தரகண்ட் மாநிலம் பாதாவிலிருந்து கேதார்நாத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று திடீரென விபத்திற்குள்ளானது. 

ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவரும் உயிரிழந்தார். 

இதனால் இந்த விபத்தில் 7 பேரும் பலியாகியுள்ளதாக உத்தரகண்ட் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களில் பிரேம்குமார் (63), கலா (50), சுஜாதா (56) ஆகிய மூவரும் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT