இந்தியா

‘அக்னி பிரைம்’ ஏவுகணை சோதனை வெற்றி

 உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, நடுத்தர தொலைவு இலக்குகளைத் தாக்கவல்ல ‘அக்னி பிரைம்’ ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

DIN

 உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, நடுத்தர தொலைவு இலக்குகளைத் தாக்கவல்ல ‘அக்னி பிரைம்’ ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

ஒடிஸாவின் பாலசோா் பகுதியில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு ஏவப்பட்டு அக்னி பிரைம் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. திட எரிபொருளைக் கொண்டு முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அந்த ஏவுகணை வெற்றிகரமாகச் செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏவுகணையில் பொருத்தப்பட்டிருந்த ரேடாா் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கருவிகளும் எதிா்பாா்க்கப்பட்டபடி திறம்படச் செயல்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) தயாரித்த அந்த நவீன தலைமுறை ஏவுகணையானது, நடுத்தர தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

இதற்கு முன் அக்னி பிரைம் ஏவுகணையானது கடந்த ஆண்டு டிசம்பா் 18-ஆம் தேதி இதே தீவில் இருந்து வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒளி நீ... ரம்யா பசுபுலேட்டி!

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: குடியரசு துணைத் தலைவராகிறார்! 452 வாக்குகளுடன் வெற்றி!

மலர்களே மலரட்டும்... சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி!

குடியரசு துணைத் தலைவராகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்! தேர்தலில் வெற்றி! செய்திகள்: சில வரிகளில் |9.9.25

கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்!

SCROLL FOR NEXT