இந்தியா

அருணாசலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு! 

அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

DIN

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன கடைசி வீரர்களின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 

அருணாசலில் சியாங் மாவட்டத்தில் உள்ள லிகாபலி என்ற பகுதியிலிருந்து 5 வீரர்களுடன் அதிநவீன இலகுரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த ஹெலிகாப்டா், நேற்று காலை 10.43 மணியளவில் விபத்துக்குள்ளானது.

இதுகுறித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழுவினா் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது 4 வீரா்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. எஞ்சிய ஒருவரின் உடல் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில், இன்று காலை ராணுவ வீரரின் உடல் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த மாதம் அருணாசலப் பிரதேசத்தில் இரண்டாவது முறையாக ராணுவ ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளாகியது. கடந்த அக்டோபா் 5-ஆம் தேதி, அந்த மாநிலத்தில் உள்ள தவாங் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளாகி, விமானி ஒருவா் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! புதிதாக 41,492 பேர் சேர்ப்பு!

அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

அயர்லாந்து 235 ரன்கள் குவிப்பு..! டி20 உலகக் கோப்பையில் புதிய வரலாறு!

காதலர் தினம்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

கனடாவுக்கு தேவை வெளிச்சம், அனுதாபம் அல்ல..! கேப்டன் தில்ப்ரீத் சிங் பஜ்வா பேட்டி!

SCROLL FOR NEXT