இந்தியா

18 லட்சம் விளக்குகள்! மோடி வருகை! விழாக்கோலம் பூண்டது அயோத்தி!

DIN


தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்திரப்பிரதேசத்திற்குச் செல்ல உள்ளார். அயோத்தியில் நடைபெறும் 6-ஆவது தீப உற்சவ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவுள்ளார். 

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 18 லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்களை 22,000-க்கும் அதிகமான பக்தா்கள் ஏற்றி வழிபாடு நடத்த உள்ளனா்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகையையொட்டி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும் தீபாவளி பண்டிகையையொட்டி தீப ஒளி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்ந்து 6வது ஆண்டாக சரயு நதிக்கரையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளார். மாலை 6.30 மணியளவில் தீப நிகழ்ச்சியை தொடக்கி வைக்கிறார். 

முன்னதாக ராமா் கோயில் கட்டுமானப் பணிகளைப் பிரதமர் மோடி பார்வையிட்டு, ராமா் கோயிலில் வழிபாடு நடத்த உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருடன் வெளியீடு அறிவிப்பு!

விக்கெட் எடுத்தபின் ஏன் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை?: சுனில் நரைன் பதில்!

ஆவேஷத்தைக் கொண்டாடும் ரசிகர்கள்!

பேசுவதற்கும் முறையிருக்கிறது; கே.எல்.ராகுலுக்காக குரல் கொடுத்த இந்திய வீரர்!

பாலியல் புகார்: பிரிஜ் பூஷண் மீது குற்றச்சாட்டைப் பதிய நீதிமன்றம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT