இந்தியா

தீவிர புயலாக சிட்ரங் வலுவடையும்: வானிலை ஆய்வு மையம் 

தீவிர புயலாக சிட்ரங் வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

தீவிர புயலாக சிட்ரங் வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, வடமேற்கு திசையில் நகா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (அக்.23) காலை கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்காளவிரிகுடா பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

பின்னா், படிப்படியாக நேற்று மாலை புயலாக மாறிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தீவிர புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிட்ரங் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல் வங்கதேசம் அருகே நாளை காலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் காரணமாக மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, வங்கக்கடல், ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

SCROLL FOR NEXT