முகப்பு
இந்தியா

288 மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசத்தில் 288 திட்டங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:39 AM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் 288 திட்டங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். 

கோரக்பூர் நகரில் ரூ.80 கோடிக்கு இந்த நலத்திட்டங்கள் அமைக்கப்படும் எனவும் மேடையில் குறிப்பிட்டார். 

தீபாவளி பண்டிகையையொட்டி உத்தரப் பிரதேச மாநில கோரக்பூரில் பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடக்கி வைத்தார்.

மேலும், ரூ.80 கோடி மதிப்புள்ள 288 நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக மாநில மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்ட யோகி ஆதித்யநாத்,

தனது குடும்பத்தோடு உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், ஏழை மக்களுடனும் பகிர்ந்து கொண்டாடுவதன் மூலம் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் எனக் குறிப்பிட்டிருந்தார். 

முன்னதாக தீபாவளியையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தரிசனம் செய்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.