இந்தியா

குறையும் கரோனா பாதிப்பு... நாட்டில் புதிதாக 1,112 பேருக்கு தொற்று!

DIN

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,112 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 5 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,112 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,28,987 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,892 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,97,072 ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,821 ஆகக் குறைந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.77 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,19,58,84,786 டோஸ் தடுப்பூசிகள் (95.01 கோடி இரண்டாவது டோஸ் மற்றும் 22.05 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்) செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 1,22,555  டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT