நாடு முழுவதும் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் நாணயம் நாளை (நவ.1) முதல் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த டிஜிட்டல் நாணயங்களை முதல்கட்டமாக மொத்த பரிவர்த்தனைகளுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
அரசு வெளியிடும் பத்திரங்களை டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம்
பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் வங்கி உள்ளிட்ட 9 வங்கிகளில் டிஜிட்டல் நாணயங்களைப் பயன்படுத்தலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.