பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு 
இந்தியா

பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு

இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்ரின் கொலோன்னா பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். 

DIN

இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்ரின் கொலோன்னா பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். 

பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்ரின் கொலோன்னா மூன்று நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார். இன்று தில்லி வந்த அவர், முக்கியத் தலைவர்களை சந்தித்த பிறகு நாளை மகாராஷ்டிரததிற்கு செல்லவுள்ளார். அங்கு தொழில் துறையினரை சந்திக்கவுள்ளார். 

முன்னதாக தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை கேத்ரின் கொலோன்னா நேரில் சந்தித்துப் பேசினார். அதில் இந்தோ- பசுபிக் முத்தரப்பு வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர். 

அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் தெரிவித்ததாக நட்பு ரீதியான வாழ்த்தை பிரதமரிடம் குறிப்பிட்டார். பின்னர் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்த சிந்தனையுள்ள கருத்துக்கள், பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இண்டிகோ குளறுபடி: உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

தலைஞாயிறு அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் விவசாயிகள் சாலை மறியல்

வந்தே மாதரம் 100 ஆண்டு நிறைவின்போது அவசரநிலையில் இருந்த நாடு: பிரதமர் மோடி

ரூ. 1,020 கோடி ஊழல்: அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்! - அண்ணாமலை

காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்! Delhi-க்கு 4 ஆவது இடம்! | Air Pollution

SCROLL FOR NEXT