முகப்பு
இந்தியா

நொய் அரிசி ஏற்றுமதிக்குத் தடை: ‘உள்நாட்டில் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும்’

 நொய் அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உள்நாட்டில் அதன் சில்லறை விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

 நொய் அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உள்நாட்டில் அதன் சில்லறை விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாநிலங்களில் போதிய அளவு மழை பெய்யாததால், நடப்பு காரீஃப் பருவத்தில் நாட்டில் நெல் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இதனால் காரீஃப் பருவத்தில் அரிசி உற்பத்தி 60 லட்சம் முதல் 70 லட்சம் டன் வரை குறைய வாய்ப்புள்ளது என்று அண்மையில் மத்திய உணவுத் துறை தெரிவித்தது.

அதேவேளையில், வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் நொய் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டதால், உள்நாட்டில் அதன் மொத்த மற்றும் சில்லறை விற்பனை விலை அதிகரித்தது. இதனைக் கருத்தில்கொண்டு அந்த அரிசி ஏற்றுமதிக்கு செப். 9 முதல் மத்திய அரசு தடை விதித்தது. அத்துடன் புழுங்கல் அரிசியைத் தவிர பாசுமதி அல்லாத இதர அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரி விதித்தது.

இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறுகையில், ‘ நொய் அரிசி ஏற்றுமதிக்குத் தடை, புழுங்கல் அரிசியைத் தவிர பாசுமதி அல்லாத இதர அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரி ஆகியவை உள்நாட்டில் அவற்றின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும். அவற்றின் விநியோகத்தையும் ஊக்குவிக்கும்’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.