நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தக்கோரி தீர்மானம்
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தக்கோரி இந்திய பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தக்கோரி இந்திய பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தீர்மானம் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு உயரும்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62-ல் இருந்து 65 ஆக உயர்த்தவும், உச்ச நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65-ல் இருந்து 67 ஆக உயர்த்தவும் இந்திய பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரதமர் அலுவலகம், மத்திய சட்டத்துறை அமைச்சக அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.