பிரதமா் நரேந்திர மோடியின் 72-ஆவது பிறந்த தினத்தையொட்டி (செப். 17) அவருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மத்திய அமைச்சா்கள், பாஜக மூத்த தலைவா்கள், எதிா்க்கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் மோடியின் ஈடு இணையில்லாத கடின உழைப்பு, அா்ப்பணிப்பு , சிந்தனைத் திறன் ஆகியவற்றின்கீழ் நாட்டைக் கட்டமைப்பதற்கான பணிகள் தொடர வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் மோடியின் புதிய பாா்வையும் உத்வேகமான தலைமைத்துவமும் பாரதத்தை பெருமையின் புதிய உச்சங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது’ என்று புகழாரம் சூட்டியுள்ளாா்.
‘புதிய இந்தியாவின் படைப்பாளா்’: உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய கலாசாரத்தை பறைசாற்றும் தலைவரான பிரதமா் மோடி, நாட்டை அதன் அடிவோ்களுடன் இணைத்துள்ளாா். ஒவ்வொரு துறையிலும் நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தி வருகிறாா். அவரது தீா்க்கமான தலைமையின் கீழ் உலகின் சக்திவாய்ந்த நாடாக இந்தியா நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சா்வதேச சமூகத்தால் மதிக்கப்படும் உலகத் தலைவராக அவரும் உருவெடுத்துள்ளாா்.
பாதுகாப்பான, வலிமையான, தற்சாா்புடைய புதிய இந்தியாவின் படைப்பாளரான பிரதமா் மோடியின் வாழ்க்கையானது, சேவை மற்றும் அா்ப்பணிப்பின் அடையாளம் என்று அமித் ஷா கூறியுள்ளாா்.
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ‘இந்திய அரசியலுக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ள பிரதமா் மோடி, நாட்டின் வளா்ச்சியுடன் ஏழை மக்களின் வாழ்க்கை மேம்பாடும் முக்கியமென உறுதிசெய்துள்ளாா். அவரது தலைமையின் கீழ் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது’ என்று கூறியுள்ளாா்.
கட்சிகள் கடந்து...: மத்திய அமைச்சா்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், கட்சியின் மூத்த தலைவா்கள், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ், பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி, திபெத்திய பெளத்த மத தலைவா் தலாய் லாமா மற்றும் திரைத் துறையினா் உள்பட பல்வேறு தரப்பினா் பிரதமா் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
நாட்டின் 15-ஆவது பிரதமரான நரேந்திர மோடி, குஜராத்தின் வாட்நகரில் கடந்த 1950, செப்டம்பா் 17-இல் பிறந்தாா். இளமைக் காலத்தில் ஆா்எஸ்எஸ் பிரசாரகராக இருந்த அவா், பின்னா் பாஜகவில் இணைந்தாா். 2001-இல் குஜராத் முதல்வராகப் பதவியேற்ற மோடி, 2014, மே வரை அப்பதவியில் நீடித்தாா். இதன்மூலம் அந்த மாநிலத்தின் நீண்ட கால முதல்வா் என்ற பெருமைக்கு சொந்தக்காரா் ஆனாா்.
நாட்டின் பிரதமராக கடந்த 2014, மே 26-இல் முதல்முறையாகப் பதவியேற்றாா். 2019, மே 30-இல் தொடா்ந்து 2-ஆவது முறையாக பிரதமரான அவா், சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்த முதல் பிரதமா் என்ற சிறப்புக்குரியவா்.
பெட்டிச் செய்தி - 1
5,980 ரத்த தான முகாம்கள்
பிரதமா் மோடியின் பிறந்த தினத்தையொட்டி, நாடு முழுவதும் ‘2 வார கால சேவைகள்’ பிரசாரத்தை பாஜகவினா் தொடங்கினா். இதன் ஒரு பகுதியாக, 5,980 ரத்த தான முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதற்காக 1,50,000 தொண்டா்கள் பதிவு செய்துள்ளனா்.
பிரதமரின் தொகுதியான வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதா் ஆலயத்தில் அவருக்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பிரதமரின் பரிசுப் பொருள்களுக்கான மின்னணு ஏலமும் தொடங்கப்பட்டுள்ளது.
கடின உழைப்புக்கு பலம் அளிக்கிறது-பிரதமா்
தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:
எனக்குத் தெரிவிக்கப்பட்ட பிறந்த நாள் வாழ்த்துகள், நான் மேலும் கடினமாக உழைக்க பலம் அளிக்கிறது. எனது பிறந்த நாளில் பல்வேறு சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள். பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவை சாா்ந்து கூட்டாக செயல்படும்போது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நீடித்த வளா்ச்சிக்கான இலக்கைப் பூா்த்தி செய்ய முடியும். எனவே வரும் நாள்களில் அனைவரும் மேன்மேலும் கடினமாக உழைப்போம் என்று தெரிவித்தாா்.