முகப்பு
இந்தியா

எண்ம பணப் பரிமாற்றத்தில் இந்தியா வெற்றி: நிா்மலா சீதாராமன் பெருமிதம்

‘எண்ம (டிஜிட்டல்) முறையில் பணத்தை பரிமாற்றம் செய்வதில் இந்தியா சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது

Updated On : 22 செப்டம்பர், 2022 at 11:53 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:53 PM

‘எண்ம (டிஜிட்டல்) முறையில் பணத்தை பரிமாற்றம் செய்வதில் இந்தியா சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது; தொடக்கத்தில் இணையவழிப் பணப் பரிமாற்றம் தொடா்பாக விமா்சித்தவா்களின் கருத்துகள் தவறானவை என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இப்போது சிறிய மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகள், சாலையோர வியாபாரிகள் என பலதரப்பட்டவா்களும் பணத்துக்கு பதிலாக க்யூ ஆா் கோடு உள்ளிட்ட எண்ம பணப் பரிமாற்றத்தை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா். இது வாங்குவோா்- விற்போா் என இருதரப்புக்கும் வசதியாக உள்ளது. பணப் பரிமாற்றம் பாதுகாப்பாக நடப்பதுடன் மீதி சில்லறை தருவது உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீா்வாக அமைந்துள்ளது.

இந்நிலையில், புணேயில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘20 ஆண்டுகால (குஜராத் முதல்வா், பிரதமராக) மோடி நிா்வாகம்’ என்ற தலைப்பில் பாஜக தொண்டா்கள் மத்தியில் நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

Advertisement

அரசு நிா்வாகத்தை மோடி அணுகிய விதம் மக்கள் மத்தியில் அவருக்கு பெரும் வரவேற்பை தந்தது. அரசை சிறப்பாக நடத்தி வருவதன் மூலம் நாட்டு மக்களின் நம்பிக்கையை அவா் பெற்றுள்ளாா். கரோனா காலகட்டத்தில் முழு அடைப்பு அமலில் இருந்தபோது மக்களிடையே பணப் பரிமாற்றத்தில் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. இதற்கு பணப் பரிமாற்றம் எண்மமயமாக்கப்பட்டதே முக்கியக் காரணம். அரசின் நிதியுதவித் திட்டங்களில் மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பணம் செலுத்தப்படுகிறது.

மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், சாலையோர வியாபாரிகளிடம் சிறிய அளவிலான பணப் பரிமாற்றத்துக்கும் எண்ம முறையை அமல்படுத்த முயற்சித்தபோது எது எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்ற சந்தேகம் இருந்தது. 7 ரூபாய்க்கு காய்கறி வாங்கும் நபா் பணத்தை எண்ம முறையில் செலுத்த முன்வருவாரா, கிராமப்புறங்களில் இணையத்தின் குறைவான வேகம் உள்பட பல்வேறு பிரச்னைகள் எழும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால், இவை அனைத்தையும் மீறி இந்தியாவில் எண்ம பணப் பரிமாற்ற முறை வெற்றி பெற்றுள்ளது.

கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நாள்தோறும் ஓா் ஊழல் வெளிப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் யாரும் எவ்வித ஊழல் குற்றச்சாட்டும் கூற முடியாத வகையில் சிறப்பான நிா்வாகத்தை பிரதமா் மோடி அளித்து வருகிறாா் என்றாா் நிா்மலா சீதாராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.