முகப்பு
இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை 3-வது நாளாக முடக்கம்

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை மூன்றாவது நாளாக முடங்கியது.

Updated On : 20 ஜூலை 2022, 2:26 pm IST
பகிர்:

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை மூன்றாவது நாளாக முடங்கியது.

மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகின்றது. விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், முதல் இரண்டு நாள் கூட்டம் முடங்கியது.

இந்நிலையில், இன்று காலை அவைகள் கூடியவுடன் விலை உயர்வு குறித்து விவாதிக்க மீண்டும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, அத்தியாவசியப் பொருள்களை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டனர்.

Advertisement

Advertisement

இதையடுத்து இரு அவைகளும் பிற்பகல் 2 வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் பிற்பகலில் மீண்டும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி தொடர்ந்ததால் நாளை காலை 11 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments