இந்தியா

தனக்கெதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும் கேஜரிவால் உரிய நேரத்தில் பதிலளிப்பார்: பிகார் முதல்வர்

அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிரான அனைத்து கேள்விகளுக்கும் அவர் சரியான நேரத்தில் பதிலளிப்பார் என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

DIN

அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிரான அனைத்து கேள்விகளுக்கும் அவர் சரியான நேரத்தில் பதிலளிப்பார் என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தில்லி கலால் கொள்கை தொடர்பாக அரவிந்த் கேஜரிவாலிடம் விசாரணை நடத்த சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதையடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும். அவர் சிறந்த மனிதர். தில்லியில் பல முன்னேற்றங்களுக்கான வேலையை அவர் செய்துள்ளார். அவருக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும், கேள்விகளுக்கும் அவர் உரிய நேரத்தில் பதில் அளிப்பார். இதுபோன்ற காரணங்களுக்காகவே நாங்கள் நாட்டிலுள்ள பல கட்சிகளை மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைத்து வருகிறோம். நாங்கள் ஒன்றாக ஒற்றுமையாக இணைந்து செயல்படுவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT