ஹரியாணா வேளாண் பல்கலையில் பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் பங்கேற்பு!
ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் ஹரியாணா வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் ஹரியாணா வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
இவ்விழாவில் ஹரியாணா ஆளுநர் மற்றும் வேளாண் பல்கலைக்கழக தலைவருமான பண்டாரு தத்தாத்ரேயா விழாவுக்கு தலைமை தாங்குவதாக துணைவேந்தர் பல்தேவ் ராஜ் கம்போஜ் தெரிவித்தார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 290 இளங்கலை, 447 முதுகலை மற்றும் 128 முனைவர் பட்டங்கள் வழங்கப்படும் என்றும், முதல்வர் மனோகர் லால் கட்டார் கலந்துகொள்வார் என்றும் அவர் கூறினார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.