இந்தியா

அதானி, சீனா பற்றி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசுங்கள்: ஜெய்ராம் ரமேஷ்

DIN


புது தில்லி: அதானி, சீனா உள்ளிட்ட பல விவகாரங்களில் பிரதமர் மோடி மௌனமாகவே இருப்பதாகவும், எனவே, மனதின் குரல் நிகழ்ச்சியில் இதுபற்றி பேசலாம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது, பிரதமர் அலுவலக தகவல் தொடர்புத் துறை, ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து விளம்பரப்படுத்த அதிகநேரம் வேலை செய்து வருகிறது. அதேவேளையில், அதானி, சீனா, சத்யபால் மாலிக் உள்ளிட்ட பல விவகாரங்களில் இன்னமும் மௌனமே நிலவுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறும் மனதின் குரல் நிகழ்ச்சி, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் 100வது மனதின் குரல் நிகழ்ச்சி என்பதால், அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அந்த நாளை சிறப்பிக்கும் வகையில், மத்திய அரசு 100 ரூபாய் நாணயத்தையும் வெளியிடுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT