கோப்புப்படம் 
இந்தியா

ஜார்க்கண்டில் உறைவிடப் பள்ளியில் 148 மாணவர்களுக்கு கரோனா

ஜார்க்கண்டில் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள உறைவிடப் பள்ளியில் 148 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

DIN

ஜார்க்கண்டில் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள உறைவிடப் பள்ளியில் 148 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து துணை ஆணையர் விஜய் ஜதவ் கூறுகையில், 

கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா(கே.ஜி.பி.வி) பள்ளியில் திங்கள் கிழமையன்று 69 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று 148 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. 

மாவட்டத்தில் துமாரியா, போட்கா மற்றும் ஜாம்ஜெட்பூர் ஆகிய இடங்களில் உள்ள கேஜிபிவி உறைவிடப் பள்ளிகளில் இன்று மேலும் 79 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. 

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது. 

கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து, ரயில்வே நிலையம், பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளில் கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT