இந்தியா

தில்லி காங்கிரஸ் கமிட்டி தலைவராக அரவிந்தர் சிங் லவ்லி நியமனம்! 

DIN

தில்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அரவிந்தர் சிங் லவ்லி வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். 

மாநில அலகுகளில் நிறுவன மறுசீரமைப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஷீலா தீட்சித் அரசில் முன்னாள் அமைச்சரான லவ்லியை தேசிய தலைநகரில் கட்சியின் கமிட்டி தலைவராக நியமித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2017இல் பாஜகவில் சேர்ந்த லவ்லி, சில மாதங்களில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் தில்லி பிரிவு தலைவராக அனில் சௌத்ரிக்குப் பதிலாக அரவிந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 

பதவி விலகும் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அனில் சௌத்ரியின் பங்களிப்பை அக்கட்சி பாராட்டியதாக ஏஐசிசி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT