சிறுபான்மையினருக்கான பட்ஜெட்டை உயர்த்துவதில் என்ன தவறு?: கர்நாடக முதல்வர்
கர்நாடக மாநில முதல்வர், சிறுபான்மையினருக்கான மாநில பட்ஜெட்டை உயர்த்துவதில் என்ன தவறுள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா சிறுபான்மையினருக்கான மாநில பட்ஜெட்டை உயர்த்துவதில் என்ன தவறுள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், இஸ்லாமியர்கள் உள்பட அனைத்து சமூகத்தினரையும் பாதுகாப்பேன் என உறுதியளித்தார். இதனை இஸ்லாமியர்களை மட்டுமே பாதுகாப்பதாகக் கூறியதாய் சில ஊடகங்கள் திரித்துக் கூறியதாகக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிக்க: வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு: சிசிடிவி காட்சிகள் வெளியானது
Advertisement
Advertisement
மேலும், சிறுபான்மையினருக்கான மாநில பட்ஜெட்டை ரூ. 4000 கோடியிலிருந்து ரூ.10,000 கோடியாக உயர்த்துவதாக அவர் தெரிவித்ததற்கு எழுந்த விமர்சனங்களுக்கு, 'அதில் என்ன தவறுள்ளது' என்ற கேள்வியைப் பதிலாக அளித்துள்ளார்.
எனது உரையைத் திரித்து ஒளிபரப்பி சர்ச்சையை ஏற்படுத்துவதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் என வறுத்தம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.