பாதிப்புக்குள்ளான தண்டவாளம் | (ANI Twitter) 
இந்தியா

தண்டவாளம் வெடிவைத்துத் தகர்ப்பு, 13 ரயில்கள் ரத்து! 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ரயில் தண்டவாளத்தை வெடிவைத்துத் தகர்த்ததால் 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

DIN

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தை மர்ம நபர்கள் வெடிவைத்துத் தகர்த்ததில் 2 முதல் 3 மீட்டர் அளவிலான தண்டவாளம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு, மகாஹாதேவ்சல் மற்றும் போசோய்டா ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ராஞ்சியிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக காவல் கண்காணிப்பாளர் அசுடோஷ் சேகர் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்டுகளால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும், ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் அதிகாலையிலிருந்து நடைபெற்று வருவதாகவும் அசுடோஷ் தெரிவித்துள்ளார். 

பயணிகளின் பாதுகாப்பு கருதி அந்த வழியாகச் செல்லும் 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதீத தன்னம்பிக்கை வேண்டாம், சூழலுக்கேற்ப விளையாடுங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT