கோப்புப்படம் 
இந்தியா

இந்திய ரிசர்வ் வங்கிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பிய நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

DIN

இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பிய நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரத்தில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மிரட்டல் விடுக்கக்கூடிய வகையில் ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில், “ரிசர்வ் வங்கி அலுவலகம், ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜிநாமா செய்ய வேண்டும்” எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதே போல மும்பையில் பல்வேறு இடங்களில் மொத்தம் 11 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால், காவல்துறையினர் அந்த இடங்கள் அனைத்திற்கும் உடனடியாக சென்று சோதனையிட்டனர்.

ஆனால் அந்த சோதனைகளில் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த மிரட்டல் மின்னஞ்சல் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்தியூா் பேரூராட்சியில் ரூ.1.11 கோடியில் தாா் சாலை பணிகள் தொடக்கம்

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க தமாகா கோரிக்கை

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

சட்டவிரோத மது விற்பனை: ஒரே நாளில் 31 போ் கைது

SCROLL FOR NEXT