முகப்பு
இந்தியா

மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த பட்ஜெட்: ப. சிதம்பரம்

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி 2023, 9:19 pm IST
ப. சிதம்பரம் (கோப்புப் படம்)
பகிர்:

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். 

2023 - 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில், நடப்பாண்டுக்காக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் வகையில்  உள்ளதாக ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். 

Advertisement

Advertisement

மேலும் அவர் பேசியதாவது, புதிய வரிமுறையை தேர்ந்தெடுத்தோருக்கு சிறிய எண்ணிக்கை தவிர வரிகள் குறைக்கப்படவில்லை. பெருமுதலாளிகளுக்கும் ஏழை மக்களுக்கும் இடையேயான வேறுபாட்டை மேலும் அதிகரிக்கும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை, வறுமை, சமத்துவமின்மைக்கான ஒரு அம்சங்களும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments