கோப்புப்படம் 
இந்தியா

உச்ச நீதிமன்றத்துக்கு மேலும் இரண்டு நீதிபதிகள் நியமனம்; நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்வு!

உச்ச நீதிமன்றத்துக்கு மேலும் புதிய நீதிபதிகளாக 2 உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெள்ளிக்கிழமை(பிப்.10) நியமிக்கப்பட்டுள்ளனர்.

DIN


புதுதில்லி: உச்ச நீதிமன்றத்துக்கு மேலும் புதிய நீதிபதிகளாக 2 உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெள்ளிக்கிழமை(பிப்.10) நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டால், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக இருக்கும்.

உச்ச நீதிமன்ற கெலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, "இந்திய அரசியலமைப்பின் கீழ் உள்ள விதிகளின்படி, அலகாபாத் உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல், குஜராத் உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகிய 2 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்து அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். 

உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் இரண்டு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களின் பெயர்களை உச்ச நீதிமன்ற கெலீஜியம் கடந்த மாதம் பரிந்துரை செய்தது என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டால், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக இருக்கும்.

கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக ஐந்து நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT