இந்தியா

தேவாலயத்தை எரித்து 'ஸ்ரீ ராம்' பெயரை எழுத்திச்சென்ற மர்ம நபர்கள்!

DIN

மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தினுள் தீயிட்டு எரித்து சுவர்களில் ஸ்ரீ ராம் என்ற வாசகத்தை மர்ம நபர்கள் எழுத்திச்சென்றுள்ளனர். 

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம்  மாவட்டம்  கேசலா தாலுகாவில்   உள்ள  சுக்தவா கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் செயல்பட்டு வருகிறது.

இந்த தேவாலயம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியில் கட்டப்பட்டு, அங்குள்ள கிறிஸ்தவ மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த தேவாலயத்திற்கு நேற்றிரவு வந்த மர்ம நபர்கள், சன்னல் திரைச்சீலைகளுக்கு தீயிட்டு எரித்து, உள்ளே போட்டுள்ளனர். இதில், தேவாலயத்தில் இருந்த மரமேசை, நாற்காலிகள் சுவர்கள் தீயில் சேதமடைந்தன.

மேலும், தீயில் உண்டான புகையில் கருப்பாக மாறிய சுவரில் ராம் என்று எழுதிவிட்டுச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக தேவாலயம் தரப்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. 

காவல் துறையினர் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல், பிற மதங்களை இழிவு செய்து புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT