கோப்புப் படம் 
இந்தியா

10, 12ம் வகுப்பில் இடைநின்ற 4 லட்சம் மாணவர்கள்!

உத்தரப் பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 4 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

 
உத்தரப் பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 4 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தரப் பிரதேசத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக காலை, மதியம் என இரு பிரிவுகளாக நடைபெற்ற முதல் நாள் தேர்வில் சுமார் 4 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என அம்மாநில கல்வித் துறை தெரிவித்துள்ளது.

காலை நடைபெற்ற தேர்வில் 2,18,189 பேரும், மதியம் நடைபெற்ற தேர்வில் 1,83,865 பேரும் பொதுத்தேர்வை எழுதவில்லை. 

மேலும், மாநிலம் முழுவதும் நடைபெற்றத் தேர்வில், முறைகேடில் ஈடுபட்டதாக 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: சிறப்புக் குழு விசாரணை தொடக்கம்!

விபத்தை ஏற்படுத்திய விஜய் பிரசார வாகனம், ஓட்டுநர் மீது வழக்கு!

தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை வீழ்த்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஓடிடியில் வெளியானது காந்தி கண்ணாடி!

உக்ரைன் பயணியர் ரயில் மீது ரஷியா தாக்குதல்! ஒருவர் பலி; 30 பேர் காயம்!

SCROLL FOR NEXT