கோப்புப்படம் 
இந்தியா

லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க அனைத்து  முயற்சிகளும் எடுக்கப்படும்: பிரதமர் மோடி

லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று  பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் கூறியுள்ளார்.

DIN

லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று  பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் கூறியுள்ளார்.

லடாக் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியால், தனது ட்விட்டர் பக்க பதிவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு லடாக்கிற்கு அனைத்துவித கால நிலைக்கும் ஏதுவான வகையில் 4.1 கிலோமீட்டர் நீளம் ஷிங்குன்லா சுரங்கப்பாதையை வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிப்பதற்காக ரூ.1681.51 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

பிரதமர் மோடியின் இந்த முடிவுக்கு லடாக் தொகுதியின் மிகவும் பின்தங்கிய பகுதியான ஜனஸ்கர் பகுதியில் உள்ள லுங்னக் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்களின் மகிழ்ச்சி, வரவேற்பு மற்றும் நன்றியையும் தெரிவித்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார். 

இது குறித்து பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
 
”லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க அனைத்து விதமான முயற்சிகளிலும் மேற்கொள்ளப்படும்” என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெடி மருந்துகளை பதுக்கியவா் கைது

கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை: முதல்வர் ஸ்டாலின்

வத்தலகுண்டு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயம்

லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஷாங்காய் நகரில் புதிய இந்திய தூதரக கட்டடம் திறப்பு! 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்..!

SCROLL FOR NEXT