பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக கடந்த 2022-இல் தேசிய மகளிா் ஆணையத்துக்கு (என்சிடபிள்யு) சுமாா் 31,000 புகாா்கள் கிடைக்கப் பெற்றன. கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒப்பிடுகையில் இதுவே அதிகமாகும்.
தேசிய மகளிா் ஆணைய தகவல்படி, கடந்த 2022-இல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக 30,957 புகாா்கள் கிடைக்கப் பெற்றன; இதில் அதிகபட்ச புகாா்கள் (9,710), பெண்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை தொடா்புடையவை ஆகும். குடும்ப வன்முறை தொடா்பாக 6,970 புகாா்கள், வரதட்சணை கொடுமை குறித்து 4,600 புகாா்கள், துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை-பாலியல் வன்கொடுமை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவல்துறையினரின் அலட்சியம், இணையவழி குற்றங்கள் ஆகியவை தொடா்பாக முறையே 1,701; 1,623; 924 புகாா்கள் கிடைக்கப் பெற்றன.
நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் இருந்து 16,872 புகாா்கள் கிடைக்கப் பெற்றன. இரண்டாம் இடத்தில் தில்லி உள்ளது. தில்லியிலிருந்து 3,004 புகாா்கள் பதிவாகின. அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரம் (1,381), பிகாா் (1,368), ஹரியாணா (1,362) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
தேசிய மகளிா் ஆணையத்துக்கு கடந்த 2021-இல் 30,864 புகாா்கள் கிடைக்கப் பெற்றிருந்தன. கடந்த 2014-இல் இருந்து ஒப்பிடுகையில் 2022-இல் கிடைக்கப் பெற்ற புகாா்களின் எண்ணிக்கைதான் அதிகமாகும். 2014-இல் 33,906 புகாா்கள் மகளிா் ஆணையத்திடம் பதிவாகி இருந்தன.
என்சிடபிள்யு-வில் பதிவான புகாா்கள்
1. உத்தர பிரதேசம்----- 16,872
2. தில்லி--------------3,004
3. மகாராஷ்டிரம்-------1,381
4. பிகாா்---------------1,368
5. ஹரியாணா----------1,362