ஐதராபாத்-விஜயவாடா இடையே வந்தே பாரத் ரயில்: ஜன.19ல் தொடங்கி வைக்கிறார் மோடி! 
இந்தியா

ஐதராபாத்-விஜயவாடா இடையே வந்தே பாரத் ரயில்: ஜன.19ல் தொடங்கி வைக்கிறார் மோடி!

தெலங்கானாவில் பல்வேறு ரயில்வே திட்டங்களையும், ஐதராபாத் மற்றும் விஜயவாடா இடையேயான வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்காக ஜன.19-ல் பிரதமர் மோடி ஐதராபாத் செல்ல உள்ளார். 

PTI

தெலங்கானாவில் பல்வேறு ரயில்வே திட்டங்களையும், ஐதராபாத் மற்றும் விஜயவாடா இடையேயான வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்காக ஜன.19-ல் பிரதமர் மோடி ஐதராபாத் செல்ல உள்ளார். 

மோடியின் மாநில பயணத்தையொட்டி, பாஜக மாநிலத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான பந்தி சஞ்சய் குமார் மற்றும் ஓபிசி மோர்ச்சா தேசியத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.லட்சுமணன் ஆகியோர் செகந்திராபாத் ரயில் நிலையத்துக்குச் சென்று தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். 

பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தெலங்கானாவில் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஜன.19-ல் பிரதமர் மோடி ஐதராபாத் செல்கிறார். 

ரூ.700 கோடி செலவில் செகந்திராபாத் ரயில் நிலையத்தை நவீனமயமாக்குவதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார் மற்றும் காசிபேட்டையில் உள்ள பணிமனையின் கட்டுமானப் பணிகளை தொடங்க உள்ளார். 

இதேபோன்று, ரூ.1,231 கோடி செலவில் செகந்திராபாத் - மஹபூப் நகர் இரட்டிப்புப் பணிகளும் தொடங்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT