இந்தியா

இந்தியாவில் 121ஆக குறைந்த கரோனா பாதிப்பு! 

DIN


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 121 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 121 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 4.46.80.215 கோடியாக உயர்ந்துள்ளது. 

கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 5,30,722 ஆக உயர்ந்துள்ளது. 
அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,319 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 52 பேர் குணமடைந்த நிலையில், கரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,47,174 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 98.80 சதவீதமாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தில் இதுவரை 220.14 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT