இந்தியா

மும்பை மருத்துவமனையில் தனஞ்சய் முண்டேவை சந்தித்தார் ஏக்நாத் ஷிண்டே!

விபத்தில் சிக்கிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் தனஞ்சய் முண்டேவை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே  இன்று சந்தித்துப் பேசினார். 

ANI

விபத்தில் சிக்கிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் தனஞ்சய் முண்டேவை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே  இன்று சந்தித்துப் பேசினார். 

ஜனவரி 4-ம் தேதி பார்லி அருகே விபத்தில் சிக்கிய முண்டேவை காயங்களுடன் சிகிச்சைக்காக லத்தூர் விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் எம்எல்ஏ தனஞ்சய் முண்டேவை முதல்வர் ஷிண்டே இன்று நேரில் சந்தித்தார். 

முன்னதாக, தனஞ்சய் முண்டே தனது தொகுதியான பார்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு திரும்பும்போது நள்ளிரவு 12.30 மணியளவில் அவர் சென்ற வாகன ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையின் விளிம்பில்  மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் முண்டே சிறு காயங்களுடன் உயிர்த் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT